search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ரகாளியம்மன் கோவில்"

    • மேலூர் அருகே சூரக்குண்டு பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு கிராமம், தெற்கு வளவாருக்கு பாத்தியப்பட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன், பாப்பான்குண்டு அய்யன் கோவிலின் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். அதனைத்தொடர்ந்து யாகசாலை பூஜை நடைபெற்றது.

    மேலூர் சிவன் கோவில் சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி குருக்கள் கணபதி ஹோமம் செய்து பூஜையை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து யாகசலை பூஜைகள் நடந்தன. நேற்று சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்தை கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதனை . கும்பாபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்
    • தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இன்று மாலை தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்.

    இதனை காண அந்தியூர் தவுட்டு ப்பாளையம் வெள்ளை யம்பாளையம், சின்னத்த ம்பிபாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், செல்லம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை தேரில் அம்மன் அலங்கரிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    • கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கணபதி ஹோமம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வரு கிறது. இதனைத்தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வரும் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி குண்டம் விழாவும், அதனைத்தொடர்ந்து தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    இதனையடுத்து சாமி ஒவ்வொரு வாகனத்திலும் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து கோவிலில் வளாக ங்கள் தண்ணீரால் தூய்மை செய்யப்பட்டு பின்னர் கணபதி ஹோமம், புண்ணிய தானம் செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இதில் பணம், தங்கம், வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாவட்டத்தில் இருந்தும் வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் நந்தினீஸ்வரி முன்னி–லையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு தனியார் கல்லூரி மாணவி களை கொண்டு காணிக்கை எண்ணப்பட்டது.

    இதில் ரூ.11,29,147 பணம், 135 கிராம் தங்கம், 205 கிராம் வெள்ளி உள்ளிட்டவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பவானி கூடுதுறை சங்க மேஸ்வரர் ஆலய உதவி ஆணையர் சாமிநாதன், அறநிலை யத்துறை ஆய்வாளர் நித்யா, கோவில் பணியாளர்கள் செந்தில், தணிகாச லம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசூர மர்தனமும், 28-ந் தேதி கிராமசாந்தியும், 29-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் அம்மன் ஒவ்வெரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் திருவிழாவும், 7-ந் தேர் திருவிழா தொடங்கி 10-ந் தேதி வரை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்து அடையும்.

    தொடர்ந்து 11-ந் தேதி பரிவேட்டையும், 12-ந் தேதி வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நாடார் உறவின் முறையார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் திருவிழா கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருப்பண்ணசாமி பூஜையும் திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.பின்பு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் இதையடுத்து கொடியேற்றுதல், காப்புக்கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்துவருதல், மாவிளக்கு, பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது.சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்கா ரத்தில் அருள்பாலித்த பத்ரகாளிஅம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் கேரள செண்டைமேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடந்தது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக திருவீதி உலா குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கொடி இறக்குதல், சக்தி கும்பம் கங்கையில் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் உறவின் முறையார் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.

    • பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது
    • திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி பொய்சொல்லா மெய்யர், பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

    பழமை வாய்ந்த இக்கோயிலில் அண்மையில் நாட்டுக்கோட்டை நகரத்தார் பெருமக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. காலை 10 மணியளவில் கோவனூர் சுவாமிநாத பண்டிதர் தலைமையில் பண்டிதர்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி விநாயகர், பொய் சொல்லா மெய்யர், பத்ரகாளியம்ன், மூலிகைமலையான், பிரம்மர் கருப்பர் மற்றும் பொன்னையா சுவாமி உள்ளிட்ட சன்னிதானங்களுக்கு குடமுழுக்கு செய்தனர்.

    விழாவின் போது திருமுறை பாராயணங்கள் ஒதப்பட்டது.விழாவை சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான காவல்துறையினர் செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள், ஊர்ப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை பூஜகர்கள் செய்திருந்தனர். தொடர்ந்து ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலா நடைபெற்றது.

    பாலமேட்டில் உள்ள பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மதுரையை அடுத்த பாலமேட்டில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன், கருப்பணசாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் கோவில் உள்ளது. பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் திருவிழா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    திருவிழாவில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கண் திறப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு பத்ரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் இரவு 9.30 மணிக்கு பொங்கல் வைத்து வழிபட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை முதல் அக்னி சட்டி எடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் பால்குடம் எடுத்து சென்றனர். மேலும் மாவிளக்கு எடுத்தும், கரும்பில் தொட்டில் கட்டியும், சாமி பொம்மைகள், குழந்தை பொம்மைகள், கை, கால் பொம்மைகள் போன்றவற்றையும் பக்தர்கள் தலையில் சுமந்து ஊர்வலமாக பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் ஆடு, சேவல் பலியிட்டும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு மொட்டையிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு மாரியம்மன் பூப்பல்லக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் வீதி உலா வந்தார். இரவு 9 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.

    திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழா நடக்கிறது. தொடர்ந்து முளைப்பாரி கரைப்பு நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்தினர் செய்துள்ளனர்.
    ×